திருவனத்தி லொருயாகம் யாம்செய்ய விழைகின்றோம்
தடையேதும் வாராது யாகமதை க் காத்திடவே
பெருவுளத்தால் நின்கரிய செம்மலை யும் இளவலையும்
பொருகின்ற தொழில்செய்து ய ாகமதை நிறைசெய்ய
திருவுளத்தால் தவறாது இருவரையு ம் அனுப்பிடுவீர்
தயரதனே, எனக்கேட்டான் மன் னவனை கோசிகனும்
மருமத்தில் எரிவேலை பெரும்புண் ணில் பாய்ச்சியதாய்
மன்னவனின் செவிவழியே கடு ந்துயரம் பாய்ந்ததுவே..
தானன்று பெற்றமுனி சாபத்தின் நி கழ்வெனவே
தன்வினையைத் தயரதனும் எண் ணியே பரிதவித்தான்
வானத்துப் பெருமகர்கள் தடைசெயல் கள் அனைத்தும்நான்
வாராது காத்திடுவேன் பு றப்படுக என்றுரைத்து
கானகத்துப் பெருவிலங்கும் அரக் கர்களும் சூழ்வனத்தில்
காத்திடவோ ராமனுக்குப் பய ிற்சிகுறை வெனவுரைத்தான்
ஞானத்துப் பெருவிளக்காம் வசிட் டரும் இடைபுகுந்து
அனைத்துமே கோசிகனால் கற் றவன்தான் ராமனென்றான்
மழைவெள்ளம் கரைபுறண்டு கடலதனில் சேர்வதுபோல்
மாவித்தை வெள்ளமென ராமனி டம் சேருமென்றான்
இழையோடும் சோகத்தைத் தயரதனில் ப ோக்கிவைத்தான்
இறையருளால் என்றுமே ராமனு க்கு வெற்றியென்றான்
தழைத்தோங்கும் ராமன்புகழ் கோசி கனால் கீர்த்திபெறும்
தருவிப்பாய் நம்பியுடன் அ வனிளவல் இலக்குவனை
விழைவோடு அனுப்பிவைப்பாய் கோசிக னின் பணிசெய்ய
விளம்பியவவ் வசிட்டனுக்கு ச் செவிசாய்த்தான் தயரதனும்.
தானழைத்த ராமனுடன் இலக்குவன் இர ுவரையும்
தானணைத்துத் தழுவியபின் க ோசிகன்பால் சேர்ப்பித்தான்
வானத்து நீள்மழைபோல் நயனங்கள் ந ீர்வழிய
வனம்செல்ல இருவரையும் வரு த்தமுடன் அனுப்பிவைத்தான்
ஞானத்துப் பெருமகனே இவ்விரண்டு மகர்க்கும்நீர்
ஞானகுரு ஆயிடினும் தாய் தந்தையு மாகிடுவீர்
மோனத்துச் சுடர்விளக்காம் இரு வரையும் காத்தருள்வீர்
மனமுவந்து அனுப்புகிறேன் ஏற்றிடுவீர் என்றுரைத்தான்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.